பேருந்தில் செல்லும் போது
உயிருள்ள ஜீவனாய் ஓடிக்கொண்டிருந்த
ஐந்து அறிவு நாயின்
கால்களின் மீது ஏற்றி ரத்த
ஆறாய் துடித்து கொண்டிருக்கிறது
கண்டும் காணாததாய் ஓட்டும்
ஓட்டுனர் சுற்றி வேடிக்கை பார்க்கும்
மனிதர்கள் பேருந்தில் இருந்து
துடிக்கும் என் இதயம் சத்தமிட்டு
திட்ட முனைகிறேன் இருந்தும்
வாயடைத்து விட்டேன் பெண்
என்பதால் பயணிக்கும் இத்தனை
பேருக்கு இல்லாத அக்கறை
உனக்கேதற்க்கு என்ற கேள்விக்காக
சுயநலத்தோடு செல்லும் மனிதர்களிடத்தில்
தன் இனத்திற்கு உயிர் ஊஞ்சல் ஆடினாலே
கவனிக்காத உலகம் ஐந்து அறிவு
ஜீவனுக்கு உதவவா போகிறது
இப்படி யோசித்து கொண்டு
துடிக்கும் என் இதயத்தோடு
கனத்த மனத்தோடு நானும்
ஊமையாகி விட்டேன் மௌனக்கதரளோடு !
உயிருள்ள ஜீவனாய் ஓடிக்கொண்டிருந்த
ஐந்து அறிவு நாயின்
கால்களின் மீது ஏற்றி ரத்த
ஆறாய் துடித்து கொண்டிருக்கிறது
கண்டும் காணாததாய் ஓட்டும்
ஓட்டுனர் சுற்றி வேடிக்கை பார்க்கும்
மனிதர்கள் பேருந்தில் இருந்து
துடிக்கும் என் இதயம் சத்தமிட்டு
திட்ட முனைகிறேன் இருந்தும்
வாயடைத்து விட்டேன் பெண்
என்பதால் பயணிக்கும் இத்தனை
பேருக்கு இல்லாத அக்கறை
உனக்கேதற்க்கு என்ற கேள்விக்காக
சுயநலத்தோடு செல்லும் மனிதர்களிடத்தில்
தன் இனத்திற்கு உயிர் ஊஞ்சல் ஆடினாலே
கவனிக்காத உலகம் ஐந்து அறிவு
ஜீவனுக்கு உதவவா போகிறது
இப்படி யோசித்து கொண்டு
துடிக்கும் என் இதயத்தோடு
கனத்த மனத்தோடு நானும்
ஊமையாகி விட்டேன் மௌனக்கதரளோடு !
No comments:
Post a Comment