05/24/11 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

May 24, 2011

உன் குரல்.


svrpamini




உன் குரலை கேட்டாலே

உதிரத்தில் அலையடிக்கும்..


உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்

என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..

என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவனே?

pamini

காதல் சாலையில்



காதல் சாலையில் நான் பயணிக்கும் போது
உன்னையும் என்னையும் நம் வாழ்க்கையையும் பற்றி
ஆயிரம் கனவுகள் வளர்த்தேன் கலைந்து விடாமல்..

ஆனால் நீயோ வார்த்தை என்னும் கூரிய ஆயுதத்தால்
என் கனவுகளை சிதைத்து விட்டாய்
உன்னால் எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு
என்னிடம் மன்னிப்பு கேட்காதே ஏன் என்றால்
உன்னை என் மனதில் குழந்தையாய் சுமக்கிறேனடா
கோழி மிதித்து குஞ்சு ஒரு போதும் இறப்பதில்லையடா

ஆனாலும் நான் ஆசையாய் வளர்த்த
என் கனவுகளை வார்த்தைகளால் கொலை செய்தாய்
இன்று என் கனவுகள் நினைவுகளில்
குற்றுயிராய் மரணித்து கொண்டு இருக்கின்றது
என் கனவுகள் மீண்டும் உயிர் பெற வேண்டுமா??
உன் இதயமும் அன்பான வார்த்தைகளும்தான்
என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் மருந்து

தயவு செய்து புரிந்து கொள் என் நினைவில் வாழும்
கனவுகளை கொன்று கொலைகாரன் ஆகிவிடாதே.
Svr.pamini


                                                                                   கயந்தன்.........

வேசங்கள்


svrpamini
வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள்
எல்லாம் வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..



காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்

வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...
சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில்
வாழ வைக்க போராடுபவனே
உன் அன்பினில் என் தாயை காண்கிறேன்..

 உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது
உன்னை குழந்தையாய் காண்கிறேன்..

இப்படி காணும் யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை
மற்றவர் அனுபவிக்க விட
நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.


Photobucket

முதல் முறை

svr.pamini

முதல் முறை உன் குரல் கேட்ட.. 
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து 
உன் குரலில் தொலைந்தே போனேன்..! 
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து 
உன் குரல் தொடுத்த இனிமையான 
அன்பான பண்பான வார்த்தைகள் 

என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..! 
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால் 
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா! 
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.! 
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்! 
விடுதலை பெற விருப்பமில்லாமல்.. 
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக 
வாழ அடம் பிடிக்கிறது...! 

என் உறவென உனை மாற்றினாய்! 
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்தது 
நித்தமும் பார்க்க வைத்தாய்.! 
என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு 
வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்.......! 



                                                                      கயந்தன்.......

கற்பனையில்

கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!
 

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்க்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை......



                                                                      கயந்தன்........

கண்டேன்

Svr.pamini



கண்டேன் கண்டேன் என் காதல்
பெண்ணின் அழகை கண்டேன்
சொன்னேன் சொன்னேன் என் காதலை சொன்னே
நான் நான் பார்க்கும் போது பார்வையாகிறாள்
நான் பேசும் போது பேச்சாய்யாகிறாள்
அழகு விழிகளால் எனை சிறையெடுக்கிறாள்
புதிதாய் மலரும் மலரென எனை மாற்றினாள்
தொலையாமல் தொலைந்தேன் நானே
உறையாமல் உறைந்தேன் உன்னுள் நானே.....



                                                                   கயந்தன்.........


                                  

ஆண்! பெண்!



பெண்!
உன்னைப் பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே

என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து
நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே
என் காதல் புரியவில்லையா?
அறிந்தும் அறியாதவனே
புரிந்தும் புரியாதவனே
புலம்புகின்றேன் புரியவில்லையா?
எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா?

ஆண்!
அறிந்தேன் பெண்ணே அறிந்தேன்
புரிந்தேன் கண்ணே புரிந்தேன்
புலம்ப வேண்டாம் பெண்ணே
உந்தன் காதல் வேண்டாம் கண்ணே
வரும் காலம் யாவும்
கண்ணீர் துளிகள் வரவாகுமே
துன்பங்கள் தொடராகுமே
இன்பங்கள் தொலைவாகுமே
உன் காதல் சில நாளில்
தேய் பிறையாகி போகுமே
என் காதலும் வேண்டாம் பெண்ணே
உன் காதலும் வேண்டாம் கண்ணே...



                                               கயந்தன்.........

நண்பனே!

svrpamini

ஓ நண்பனே ..!!!
உறக்கத்தை மறந்த உன் கண்கள்
பூமியில் எதை தேடுகின்றன..?
புதைந்து போன வாழ்வையா..?
புதிர் போடாதே நேற்றைய கனவில்
நாளைய கற்பனையில் இன்றைய
வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடினால் கிடைக்குமா நண்பனே.. ?

விளக்கொளியை கண்டு விரைந்து மடியும்
விட்டில் ஆகிவிடாதே நண்பனே..
தோல்வியை கண்டதும் தூக்கு கயிற்றை தேடாதே
அவ நம்பிக்கையை ஆறடிக்குள் புதைத்து விட்டு
தன்னம்பிக்கையை மன அரங்க்குள் விதை..!!!

அந்த பூக்கள் பூப்பறிப்பவனை கண்டும்
புன்னகை பூக்கின்றன....!!!
மரம் வெட்டிகளுக்கு கூட அந்த மரங்கள்
நிழல் தருகின்றன ..!!!
அந்த கடலின் அலைகள் தோற்று போனாலும்
மீண்டும் கரையை அடைய போராடுகின்றன..!!!..

ஆனால் நீயோ உனக்கே பாரமாய் இருக்கின்றாய்
தோல்வியை கண்டதும் துவண்டு விடுகின்றாய்
இருட்டில் இருந்தது போதும் வெளியே வா
நாளைய பொழுது நிச்சயம் உனக்காய் விடியும்
நம்பிக்கையோடு நடை போடு
நாளை உலகம் உன் கையில்..!!! 



                                                     கயந்தன்.........

கலையில்

Svr.pamini

காலையில் பூத்த பூ மாலையாகும்
முன் வாடி மயங்கி விழுகுது ஏன் ?
நடமாடும் மொட்டாக உனை
கண்டுதான் பெண்ணே.

  
                                கயந்தன்........

நினைவுகள்

svr         

உன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நான் பெற்ற குழந்தைகள்
என் கவிதைகள்...

               கயந்தன்.......



                                                                                                                                                                      

                                   
 
                                             
 

பாசம்


Photobucket

பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு

ஆனால் மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.

என் காதலை அடி மனதுக்குள்
ஆழ புதைத்து விட்டு
சாதாரண மனுசியாக வாழ நினைக்கின்றேன்..

ஆனால் உன் குரல் கேட்டால்
என் மனதுக்குள்
கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
என் மனதில் ரணங்களாய் குத்தும்
என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
பாதையில்தான் நான் பயணிப்பேன்
என்று என் மனம் துடிக்கிறது..

வேதனைகள் மட்டும் சோதனைகள்
ஆகிப்போன வாழ்வில் சாதனைகள் செய்ய துடிக்கும்
இவள் வாழ்வில் மீண்டும் சோதனைகள்தான்
வாழ்க்கையாகி போகுமா.?
விடை தெரியாதா பதிலாகி போன
என் வாழ்வில் கேள்விகள் மட்டும்
வர்க்கத்தில் விரிகின்றது

வினாக்கள் யாவும் கனாக்களில் பதில் சொல்ல
என் காதலையையும் கனாக்களில் சொல்லிவிட்டு
காலத்தை கரத்து கொள்கிறேன்
வரும் ஜென்மத்திலாவது
உன்னோடு நான் சேர்ந்து வாழ்வேனா...?

                                                                                  கயந்தன்........

வார்ததை



Svr.pamini




நீ என் மீது வீசும்வார்த்தை 
கற்க்களால் என் இதயம் 
வெடித்து விடுகிறது 
இரக்கமில்லாத அரக்கன் 
நீயடா..

               கயந்தன்.......

நெஞ்சில்


Svr.pamini

நெஞ்சில் கனவில் நினைவில்

மேடையிட்டு என் இதயத்தில் இடம் பிடித்தவளே

மொட்டாக உன் இதழ் இமைகள் மூடிக்கொண்டு

இருக்கும் உன் மணிச்சர விழிகள்

என் மேல் மலர்ந்தால் போதும் வேறன்ன

வேண்டும் எனக்கு..

                                                    கயந்தன்..........

என்னவனே!

svrpamini 













என்னவனே! தினந்தோறும் கண்களில்
கனவு சுமந்து இதயத்தில் 
உன்னை வைத்து கொண்டு வாழ்க்கை
என்னும் நரகத்தில் தினம் தினம் வாழ்ந்து 
கொண்டு இருக்கிறேன்....


                                   கயந்தன்..........
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger