பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு
ஆனால் மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.
என் காதலை அடி மனதுக்குள்
ஆழ புதைத்து விட்டு
சாதாரண மனுசியாக வாழ நினைக்கின்றேன்..
ஆனால் உன் குரல் கேட்டால்
என் மனதுக்குள்
கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
என் மனதில் ரணங்களாய் குத்தும்
என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
பாதையில்தான் நான் பயணிப்பேன்
என்று என் மனம் துடிக்கிறது..
வேதனைகள் மட்டும் சோதனைகள்
ஆகிப்போன வாழ்வில் சாதனைகள் செய்ய துடிக்கும்
இவள் வாழ்வில் மீண்டும் சோதனைகள்தான்
வாழ்க்கையாகி போகுமா.?
விடை தெரியாதா பதிலாகி போன
என் வாழ்வில் கேள்விகள் மட்டும்
வர்க்கத்தில் விரிகின்றது
வினாக்கள் யாவும் கனாக்களில் பதில் சொல்ல
என் காதலையையும் கனாக்களில் சொல்லிவிட்டு
காலத்தை கரத்து கொள்கிறேன்
வரும் ஜென்மத்திலாவது
உன்னோடு நான் சேர்ந்து வாழ்வேனா...?
கயந்தன்........
No comments:
Post a Comment