வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள்
எல்லாம் வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..
காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...
சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில்
வாழ வைக்க போராடுபவனே
உன் அன்பினில் என் தாயை காண்கிறேன்..
உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது
உன்னை குழந்தையாய் காண்கிறேன்..
இப்படி காணும் யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை
மற்றவர் அனுபவிக்க விட
நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.
No comments:
Post a Comment