12/24/11 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

December 24, 2011

உன்னையே சரண்டைகின்றேன்.




வானில் தோன்றும் அழகிய நிலவே
நீ வானை விட்டு மெல்ல பூமிக்கு வந்திடாயா என
அந்த அழகை ரசிப்பவர் மனந்தனில் ஏக்கம்
என்னவளே
ஏனோ இன்று அந்த வான் நிலவாகவே தெரிகின்றாய் நீயும்
என் கைதனில் கிடைப்பாயா என
என் மனந்தனில் ஏக்கம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நீ காட்டும் தூய அன்பு
இன்று என்னை உன் முன் சரண்டைய வைத்தது
உன்னிடம் பழகும் இந்த அழகிய நாட்களை எண்ணி
என் மனமோ வானில் பறக்கிறது
உன் மன்னிக்கும் குணம் இந்த
இயற்கையிடம் கூட நான் பார்த்த்தில்லை
ஒரு பெண்ணிற்குள் இத்தனை அழகா..?
வியப்பின் விளிம்பில் நான் இன்று.!
ஒட்டு மொத்த உறவுகளின்
மொத்த அன்பும் உன் ஒருத்தியிடம்!
நானும் அதிஷ்ட சாலி தான்
என் பிறப்பின் அர்த்தத்தை உணர்கிறேன்
இன்று உன்னை சரணடைந்தவனாக

காதல் தேசத்து அகதி.



என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
சுகமாய் வீழ்ந்த
அந்த நொடிப் பொழுது
அவன் சுவாசம்
எனைத் தீண்ட
என் மனது காதலை
பூத்த அந்த நாழிகை
அவன் பார்வைகளால்
என் இதயத்துக்குள்
சித்திரம் வரைந்த
அந்த மணித்துளிகள்
அவன் நினைவுகள்
என் மனதுக்குள்
இறங்கிய தருணங்கள்
இவை எல்லாவற்றையும்
நினைத்திடும் பொழுது
அவன் நினைவுகள்
உயிர் பெற்று
என் பொழுதுகளை
அவிய வைத்து பசியாறிக்
கொள்கின்றது இரக்கமின்றி..
அவன் நினைவுகள்
என் இதயத்தை
தீண்டி விடாமல் வேலி
போடுகின்றேன் இருந்தும்
அவன் நினைவுகள்
இதயத்தை தாண்டி
என்னை முழுவதும்
ஆக்கிரமித்து படர்கின்றதே
ஒரு வேளை அவன் நினைவுகள்
பாதீனியம் போலவோ?
நான் அழிக்க அழிக்க
மீண்டும் முளைக்கின்றதே
என் காதல் தேசத்தில்
நான் மட்டும் தனியாக
அவன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
காதல் அகதியாக வாழ்கிறேன் ...

உன்னவள்....!!



நீயில்லாத பொழுதுகள்
ஏதிலியாய் நகர...
உன் நினைவுகளும் இம்சிக்க ..
இரவுகளும் பகல்களாய்...
ரணமாய் கடந்து செல்ல....
நீ வருவாய்!
என் துயர் துடைப்பாய்!
எனை அணைத்து..
இமை தழுவி
இன்பம் சேர்ப்பாய்!
என...
என் ஏக்கங்களை
ஆற்றுப்படுத்தி..
உனக்கான நிஜம் தேடி
காத்திருக்கிறேன்..
வந்துவிடு என்னவனே....
உன்னவள் என்றும்
உனக்காகவே.......!

சாமியோ நான் வாழும் பூமியோ



சுனாமி அடித்ததன் அதிசயம்
நீ கோபப்பட்டதன்
விசித்திரம்
புயல் வீசினால் எண்ணிக்கொள்வது
புரியாத உன் அனல்
பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர
ஸ்பரிசங்கள் தான்
உன்னை சுவாசித்து  முடிந்ததும்
யாசிப்பது  முத்தப்
பரிசில்கள்  தான்
சுறாவளி  அடித்தவுடன்
சுகங்கள்  மட்டும்
எனக்குப் புரியும்
சுழன்றடிக்கும்  அதற்கு
வேகம் கற்பித்தது உன்
கால்களென தெரியும்
தொடர் வறட்சி
மத்தியிலும் நிற்காது
தொடருமுன் காதல் மழை
என்றும் குறையாது தருகிறாயே
பெண்ணே நீ சாமியோ
நான் வாழும் பூமியோ?

என் தேவிக்கு ஆராதனை.


என் இதயத்தில் அமர தீபமாய் வந்திறங்கி 
என் இருண்ட மனதில் ஜீவ ஒளியாய்  ஜொலிக்கும்
என் இதயம் எனும் கோயிலில் தீபசுடராய்
சுடரும் என் ஜோதி நீயே
என்னுள் இருந்து கொண்டே 
என்னை இல்லாமல் ஆக்குகிறாய்
என்னுள் கரைந்து கொண்டே 
என்னை காணாமல் ஆக்குகிறாய்
உன் ஜீவனால் என் ஆத்மாவை ஊதி
என்னை எனக்கே திருப்பி தந்தாய்
என் வாழ்வின் விடி வெள்ளியாய்
என் கனவுகளின் இராணியாய்
என் கற்பனைகளின் அரசியாய்
என் நினைவுகளின் சுமைதாங்கியாய்
என்னை ஆட்சி புரிபவளே
என்னுள் தேவதையாய் வந்தவளே
வசந்தத்தை பொழிபவளே
என் மனதை என் உயிரை
காக்கும் தேவி நீ
என் உள்ளத்திள் உயிராய் கலந்த
மூச்சும் நீ யே தேவி..
உன்னைப் பாட திருப்பா இல்லை
என் உயிரினை பாடலாய் கோர்கிறேன்
உன்னை பொன் நகையால் அலங்கரிக்கவில்லை
புன்னகை கொண்டு அலங்கரிப்பேன்
வானையே பட்டாய் உடுத்தி
வெண்ணிலவை பூவாய் சூட்டி
மலர் தூவி அல்ல என் மனதில்
பூத்த பூக்களால் தூவி
பால் சந்தனம் நெய்களால் அல்ல
என் இரத்த நாளங்களால் அபிசேகம் 
நடத்தி உன் பாதங்களில்
என் ஜீவனை தீபமாய் கரைத்து
என் ஜோதி நீ என்று 
இதயத்தினுள் பூட்டுகிறேன் உன்னை
என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் அலுக்கவில்லை
உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்
ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்
என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்
என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி
சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி
உன்னை சரணடைந்தேன்...
என் தேவி..........யே..

உயிர் உள்ளவரை வாழும்.










ஊர் புகழும் பட்டப் படிப்பு 
படிக்க போன மங்கையே இன்று
நம் உறவு பிரிக்க உன்
உறவு வந்த மாயமென்னவோ
சோறு பொங்க உலையும் வைத்து
காத்திருப்பேன் என்று சொன்ன மங்கையே
இன்று கண்கள் பொங்க
கதறுகிற பாவினானம்மா
கையில் ஒன்று மடியில் ஒன்று
பெத்து தருவேன் என்று சொன்ன மங்கையே
இன்று காதலனாய் நானழும்
கதையும் கண்டோ
தாலிகூட மஞ்சள் கயிறு என்று
சொல்லி மகிழ்ந்த நாமளை
அன்பு எனும் மாய வலை வீசி
மடக்க நினைக்கிறதை நீயும் அறிந்ததுண்டோ
கர்வத்தில் நான் இதை எல்லாம்
சொல்லவில்லை கண்ணே கண்ணீரோடு
கலந்த கவிதையில் சொல்கிறேன்
உன் உறவு வேண்டி
உனக்காக பல கவிகள் நான் வடித்தும்
உன் உறவுகளுக்கு இன்னும் புரியவில்லையே
உன்னை பார்த்து வந்த காதலல்ல
உன் உளம் அறிந்து வந்த காதல்
உயிர் உள்ளவரை வாழும் என்பது...  
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger