February 2012 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

February 25, 2012

உயிர்வாழும் காலம் வரை














மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா
என தவிக்கின்றேன்

உன்னை நனைத்த
மழைத்தூறல்
என்னை நனைக்காதா
என மனம் ஏங்குறேன்

நீ சிந்திய கண்ணீர்த்துளி
தண்ணீர் என்பதாலே
பன்னீரையும் வெறுக்கின்றேன்

உன் மீதான என் காதல்
என் உயிர்வாழும்
காலம் வரை நீளும்...

என்னோடும் எப்போதும்......



















சிந்தைக்குள் நின்று
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம்
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே
சீரழிந்து போனதாய் என் காதல்...

இடமாற்றம் இடறிய போது
இல்லாமல் போன காதலால்
இதயம் ஓய்ந்ததே....

இன்றும் நீ காணாமல்
இதயம் பெரும் தடுமாற்றத்தில்......

பார்வையின் ஜீவிதத்தில்
பயணித்த நேசம்
பாதை மாறிப் போன போனதாய்.....
ஆனாலும்.....
பிரிந்து போனாய் நீ
நின் நினைவு மட்டும் பிரியாமல்
என்னோடும் எப்போதும்......

காதல்..


 காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,

காதல் ஒரு வேதனை
நரகமா, சொர்க்கமா
உணர முடியாது,,

காதல் ஒரு மதில் மேல் பூனை
நல்லதா, கெட்டதா
புரிய முடியாது,,,

காதல் ஒரு நெருப்பு
தெரிந்தும் போய்-எரிந்து
போவோர் ஆயிரம் ஆயிரம்
ஏனெனில்
காதல் ஒரு போதை-பிடித்தால்
விடாது....

இனியவளே..











இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று
என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger