மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?
உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்
உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா
என தவிக்கின்றேன்
உன்னை நனைத்த
மழைத்தூறல்
என்னை நனைக்காதா
என மனம் ஏங்குறேன்
நீ சிந்திய கண்ணீர்த்துளி
தண்ணீர் என்பதாலே
பன்னீரையும் வெறுக்கின்றேன்
உன் மீதான என் காதல்
என் உயிர்வாழும்
காலம் வரை நீளும்...
No comments:
Post a Comment