காதல் சாலையில் நான் பயணிக்கும் போது
உன்னையும் என்னையும் நம் வாழ்க்கையையும் பற்றி
ஆயிரம் கனவுகள் வளர்த்தேன் கலைந்து விடாமல்..
ஆனால் நீயோ வார்த்தை என்னும் கூரிய ஆயுதத்தால்
என் கனவுகளை சிதைத்து விட்டாய்
உன்னால் எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு
என்னிடம் மன்னிப்பு கேட்காதே ஏன் என்றால்
உன்னை என் மனதில் குழந்தையாய் சுமக்கிறேனடா
கோழி மிதித்து குஞ்சு ஒரு போதும் இறப்பதில்லையடா
ஆனாலும் நான் ஆசையாய் வளர்த்த
என் கனவுகளை வார்த்தைகளால் கொலை செய்தாய்
இன்று என் கனவுகள் நினைவுகளில்
குற்றுயிராய் மரணித்து கொண்டு இருக்கின்றது
என் கனவுகள் மீண்டும் உயிர் பெற வேண்டுமா??
உன் இதயமும் அன்பான வார்த்தைகளும்தான்
என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் மருந்து
தயவு செய்து புரிந்து கொள் என் நினைவில் வாழும்
கனவுகளை கொன்று கொலைகாரன் ஆகிவிடாதே.
No comments:
Post a Comment