நான் தான் உன்னை மறந்துவிட்டேன் என்றேனே…
பின் ஏன் கனவில் வந்து கவிதை உரைத்தாய்?
கணமும் உன்னை நினையேன் என்றேனே…
பின் ஏன் கண்ணுக்குள் புகுந்து கண்மை கலைத்தாய்?
மறத்து போன உணர்வுகளையும்
மறந்து விட்ட நினைவுகளையும்
தட்டி எழுப்பி மனதில் ஏனோ மயக்கம் தந்தாய்.
நீ கொடுத்த நினைவுகளை அழித்துவிட
மனதின் ஆழத்தில் தள்ளிப் புதைத்தேன்
அதையே உரமாக்கி வேர் கொண்டு
விருட்சமாய் வளர்ந்தாய்!…
என் செய்து உன் வசம் விட்டு
என் வாசம் அடைவது?
உயிர் துறந்து மண்ணில் புதைந்த வேளையிலும் – ஐயோ!…
கல்லறைப் பூக்களாய் பூத்ததடா….
உன் ஞாபகம்!…….
பின் ஏன் கனவில் வந்து கவிதை உரைத்தாய்?
கணமும் உன்னை நினையேன் என்றேனே…
பின் ஏன் கண்ணுக்குள் புகுந்து கண்மை கலைத்தாய்?
மறத்து போன உணர்வுகளையும்
மறந்து விட்ட நினைவுகளையும்
தட்டி எழுப்பி மனதில் ஏனோ மயக்கம் தந்தாய்.
நீ கொடுத்த நினைவுகளை அழித்துவிட
மனதின் ஆழத்தில் தள்ளிப் புதைத்தேன்
அதையே உரமாக்கி வேர் கொண்டு
விருட்சமாய் வளர்ந்தாய்!…
என் செய்து உன் வசம் விட்டு
என் வாசம் அடைவது?
உயிர் துறந்து மண்ணில் புதைந்த வேளையிலும் – ஐயோ!…
கல்லறைப் பூக்களாய் பூத்ததடா….
உன் ஞாபகம்!…….
No comments:
Post a Comment