என் இதயப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையிலே
தொலைந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் கண் முன்னே...
உன்னைக் காணாமல்
கண்ணீரில் தத்தளித்த
என் விழிகள்...
உன் வரவை எதிர் பார்த்து
காத்திருந்து களைத்த
என் கால்கள்...
உன்னையே
சுற்றி சுற்றி வந்த
என் நினைவுகள்
உன் வார்த்தைகளை
வேத வாக்காக
சுமந்த என் நெஞ்சம்
இவைகள் அனைத்தும்
அழிக்க முடியாத
நினைவுகளாக
இன்னும் என் இதயப் புத்தகத்தில்...
No comments:
Post a Comment