வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...
மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...
சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...
நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...
ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....
இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!
கயந்தன்...........
No comments:
Post a Comment